இன்று நான் வாழ்வை அழகாக்குவதற்க்கான வழி ஒன்றினை என் தோழர் ஒருவரிடம் இருந்து கற்று கொண்டேன் . அதுதான் "அடுத்தவரிடம் எதையும் எதிர் பார்க்காதே! வாழ்க்கை நன்றாக இருக்கும் ". எவ்வளவு சத்தியமான வாக்கு இது. நாம் பொதுவாக நம் நண்பரிடம் எதையாவது எதிர் பார்ப்போம். உதாரணமாக அவர் கிளம்பும்போது நமக்காக காத்திருக்க வேண்டும், எதையாவது புதிதாக செய்யும் போது நம்மிடம் சொல்ல வேண்டும் போன்றவை. ஆனால் எந்த காரணத்தினாலோ அவர் அதை செய்ய வில்லை என்றால் நமக்கு கிடைப்பது ஏமாற்றமே. அதனால் அவர் மீது கொண்ட அன்பு நாளாக நாளாக குறைந்து விட கூடிய வாய்ப்பு மிக அதிகம் . அதனால் வருத்தம் நமக்கு மட்டுமல்ல, அவருக்கும் தான். இப்படி அழகாய் போய் கொண்டிருக்கும் வாழ்க்கையை நமக்கு நாமே சோக மயமாக்க காரணம் நாம்தான்.நம்முடைய எதிர்பார்ப்புதான்.
நான் இவ்வளவு அன்பு தருகிறேன் அதனால் இவ்வளவு அன்பு எதிர்பார்க்கிறேன் என்பது எவ்வளவு வேடிக்கையான விஷயம். இது என்ன வியாபாரமா? நாம் எப்போதுமே கொடுப்பவர்களாக இருந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கலாம். எதையும் எதிர்பார்க்காதபோது பதிலுக்கு அன்பு கிடைத்தால் அதை போனசாக எடுத்து கொள்ள வேண்டும். ஆனால் அது கிடைக்க வில்லை என்றால் அதை நினைத்து வருந்த கூடாது. இன்னும் அதிகமாக அன்பு செலுத்த துவங்க வேண்டும். இந்த வாழ்க்கை என்பது நமக்கு கிடைத்த வாய்ப்பு. அதை நாம் முழுவதும் மகிழ்ச்சியாக நுகர வேண்டும். ஒரு விஷயம் நமக்கு வருத்தம் தருகிறது , அதற்க்கு நாம்தான் காரணம் என்றால் அதை மாற்றி கொள்ள தயங்க கூடாது.
அதனால் அடுத்தவரிடம், குறிப்பாக நாம் அன்பு செலுத்துபவரிடம் , நம் மீது அன்பு செலுத்துபவரிடம் எதையும் , குறிப்பாக அன்பை எதிர் பார்க்க கூடாது. மாறாகஅதை வாரி வழங்க வேண்டும். அதனால் மற்றவருக்கு சந்தோசமோ இல்லையோ நமக்கு சந்தோசமாக இருக்கும். வாழ்க்கை அழகாகும். நம் வாழ்கையும் நம் சுற்றி இருப்பவர் வாழ்கையும் தான். இதை எனக்கு ஒரு வார்த்தையில் உணர்த்திய என் நண்பருக்கு நன்றி.
No comments:
Post a Comment