Thursday, February 3, 2011

மீண்டும் ஓர் அறிமுகம்


வணக்கம் நண்பர்களே! மீண்டும் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.மீண்டும் இந்த பதிவுலகத்திற்கு வருவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. நவம்பர் 14, 2010 இல் தான் பதிவுலகில் நுழைந்தேன். எழுதும் ஆர்வம் மட்டுமே உண்டு. ஆனால் எவ்வாறு எழுதுவது, நாம் எழுதியதை எல்லோரும் படிப்பார்களா எழுத்து நடை சரியாக வருமா போன்ற சந்தேகங்கள் என்னை தடுத்து வந்தன. சரி. முயற்சி செஞ்சுதான் பார்ப்பமே என்று எழுத ஆரம்பித்தேன்.ஒவ்வொரு பதிவின் போதும் கொஞ்சம் கொஞ்சமாக கற்று வந்தேன், வருகிறேன்.

இந்த நிலையில்தான் திடீரென எனது வலைப்பூவை யாரோ misuse செய்கிறார்கள் என்று கூறி அழித்து விட்டார்கள். நான் மனமுடைந்து விட்டேன். பிறகு யாருடைய வலைபதிவையும் பார்க்கவில்லை. ஒரு மாதத்திற்கு பிறகு நேற்று தான் பலரது வலைபூக்களை பார்த்தேன். எடிசன் கதை ஞாபகத்திற்கு வந்தது. சரி நம்முடைய எல்லா தவறுகளும் மறைந்து விட்டன. புதிதாக ஒரு வலைப்பூ ஆரம்பிக்கலாம் என்று blogger ஐ திறக்கும் போதுதான் மீண்டும் இந்த வலைப்பூ இருப்பதை கண்டு மிகுந்த மகிழ்ச்சி கொண்டேன். இதோ எழுத ஆரம்பித்து விட்டேன்.

நண்பர்களே! நீங்களோ உங்களுக்கு தெரிந்தவர்களோ இது போன்ற வலைப்பூ மறையும் அனுபவம் கொண்டதுண்டா? அதற்க்கான காரணம் தெரிந்தால் சொல்லுங்கள். வரும் காலங்களில் இது நிகழா வண்ணம் காத்து கொள்ள உதவியாய் இருக்கும்.

அப்புறம் இந்த வலைப்பூ எழுதாத காலத்தில் நாட்குறிப்பு எழுதும் பழக்கம்மீண்டும் வந்து விட்டது. 2007 வருடம் எழுதியிருக்கிறேன். அதன் பிறகு இந்த 2011 வருடம் தான் மீண்டும் எழுத ஆரம்பித்திருக்கிறேன். நாம் வாழும் வாழ்க்கை இல்எந்த அடையாளம் பதிக்க முடியா விட்டாலும் நமது எழுத்துக்களையாவது விட்டுசெல்கிறோம் என்ற மகிழ்ச்சி கொஞ்சம் உள்ளது. குறைந்தது இந்த ஒரு வருடம்முழுமையாகவாவது நாட்குறிப்பு எழுத வேண்டும் .


2 comments:

  1. அப்படியே வலையிலும்
    எழுதுங்கள்.

    ReplyDelete